cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 40 கவிதைகள்

ந.பெரியசாமி கவிதைகள்


நீங்களும் வந்திருக்கலாம்.

பாத்திரமொன்றில்
கொஞ்சுண்டு
கடலை நிறைத்து
வீட்டில் வைத்திருந்தான்.

பாத்திரம் பாசியை வளர்க்க
அலைகளில் கால் நனைத்து
விளையாட தினசரி
வந்துகொண்டு இருக்கிறார்கள்.

********

மணம்

அறிந்திராததோ
புழங்கியதோ
இல்லாமல் இல்லை
புதிதானதைப் போன்று
இருப்பதன் காரணம்
அறிந்ததுதான்
பிடித்தமானதாகிவிட்டது
நீல நிறத்தவள்
நினைவிலும்
நிஜத்திலும்
உடனிருக்க உருக்கொள்ளும்
புழுதியின் மணம்.

********

என்செய்ய

அதிகாரம்
யார் கைகளில்
இருக்கிறது என்பதை
அறியாதவர்கள் அல்ல.

என்செய்ய
ஏதும் செய்ய இயலாது
எதிர்படுகையில்
நாணலாகி கடந்திடுகிறோம்

இதுகூட பரவாயில்லை
சிலர் நாயாகி
நக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.


 

About the author

ந.பெரியசாமி

ந.பெரியசாமி

ஒசூரைச் சேர்ந்த இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். ‘நதிச்சிறை’, ‘மதுவாகினி’, ‘தோட்டாக்கள் பாயும் வெளி’, ‘குட்டிமீன்கள் நெளிந்தோடும் நீல வானம்’ ஆகிய கவிதை தொகுப்புகளையும், ‘மொழியின் நிழல்’ எனும் கவிதை சார்ந்த விமர்சனக் கட்டுரை தொகுப்பையும் எழுதியுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website