என்னை நேசிக்கிறேன்
என்னிலிருந்து துவங்குகிற என் காதல்
பறவையைப் போல திசையெங்கும் பறந்து
அன்பின் முதிர் தானியத்தை விதைக்கிறது
தனிமையின் வெளி
அடர் கானகம்
கரும்பாறை
பாழ்நிலம்
பாகுபாடு ஒன்றும் இல்லை
கட்டுப்பாடுகளின் பிடியில் சிக்குண்டிருப்பினும்
காதலுக்கும் யதார்த்தத்திற்கும்
இடையே காற்றைப் போல
ஊடாடிக்கொண்டிருக்கிறேன்
என் சிறு புறாக்கள்
விடியல் துவங்குகிற அதிகாலையில்
தெளிவுடைய ஒற்றைச் சொல்லின் திறவு கோலில்
பரிதாபத்திற்கு உரிய ஒரு உயிரை மீட்டெடுத்திருக்கும்
என்னிலிருந்து
என்னை விடுவித்துக்கொள்கிறேன்
யாவற்றையும் நேசிப்பதன் வழியாக.
குறிப்பு : 2013 ஆம் ஆண்டு ‘விகடன் தீபாவளி மலரில்’ வெளியான கவிஞர் சக்திஜோதியின் கவிதை “சொல்லெனும் தானியம்” நுட்பம் இணைய இதழில் “editor’s choice” பகுதிக்காக கவிஞரின் உரிய அனுமதியுடன் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.