நம் எல்லோருக்கும் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு ‘முதன் முறை ’ அனுபவங்கள் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையின் திசையை மாற்றி இருக்கும் , ஒரு புதியத் திறப்பை உருவாக்கி இருக்கும் இல்லையா ! அப்படியான திசை மாற்றி எது , புதியத் திறப்பு எது என கவிஞர்களிடம் கேட்கலாமென ஒரு ‘நுட்பமா’ன எண்ணம் எழுந்தது. உடனே தொடர்புக் கொள்ள முடிந்த கவிஞர்களிடம் ” முதன் முதலாக ” என சில கேள்விகளை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறோம். சென்ற இதழ்களில் சில கவிஞர்கள் பங்களித்தார்கள். இந்த இதழில் கவிஞர்கள் அம்மு ராகவ், ரம்யா அருண் ராயன் ஆகியோர் அளித்த பதில்கள் இதோ..!
பள்ளிக்காலத்தில் வார இதழ்களில் வெளிவரும் ஹைக்கூ கவிதைகள் பிரபலமாக இருந்தன. அதைப் பார்த்து, பன்னிரண்டு வயதில் சில ஹைக்கூ கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அதுதான் தொடக்கம். நோட்டுப் புத்தகங்களிலும் டைரிகளிலும் எழுதியவை. அந்த வயதில் பாதுகாத்து வைக்க வேண்டுமென்று தோன்றாததால் தொலைந்து விட்டன. இப்போது எதுவும் நினைவிலில்லை. தினமலர்- வாரமலரில் எனது கவிதை முதன்முதலில் பிரசுரமானது. எழுதுவேனே தவிரப் புத்தகம் வெளியிட வேண்டுமென்ற எண்ணமோ திட்டமோ எதுவும் இல்லாத காலத்தில் அதவாகக் கூடி வந்தது. Be4books (யாவரும் பதிப்பகம்) எனது முதல் கவிதைத் தொகுப்பு “ஆதிலா”-வை வெளியிட்டனர். முதல் குழந்தையைக் கையில் ஏந்துவதைப் போன்ற உணர்வு. தினமலர் திருச்சி பதிப்பின் ஆசிரியர் திரு சேது நாகராஜன் சார் அவர்களிடமிருந்து.. ! முதன்முதலில் வாசித்தது கவிப்பேரரசு வைரமுத்து கவிதைகளை.., அவர் எழுதிய அனைத்து கவிதைகளும் பிடிக்கும். 19- ஆம் வயது. அழகின் சிரிப்பு என்ற பாரதிதாசன் கவிதை கல்லூரி இரண்டாம் ஆண்டில் பாடப்பொருளாய் இருந்தது. அதேபோன்று அழகென உணரும் விஷயங்களை, எங்கள் பேராசிரியர் எங்கள் அனைவரையும் எழுதிவரப் பணித்தபோது எழுதினேன். அத்தனை கவிதைகளிலும் இருந்து என் கவிதையைத் தேர்ந்தெடுத்து மிகவும் பாராட்டினார். அன்றுதான் கவிதை எழுதும் ஈடுபாடு எனக்குள் விதைக்கப்பட்டது. ஒரு வரி மட்டும்தான் நினைவிருக்கிறது. “பெண்ணின் பின்னே பெண்டுலம் போலாடும் கூந்தல் அழகு” தினமணி வாசகசாலை பதிப்பகம் மூலமாக “செருந்தி” என்னும் முதல் தொகுப்பை சமீபமாகத்தான் வெளியிட்டிருக்கிறேன். இப்போதுதான் பறக்கத் துவங்கியிருக்கும் வலசைப் பறவையாய் பறத்தலின் சுகத்தை உணர்கிறேன். இன்னும் அடைய வேண்டிய தூரம் ஏராளம் இருப்பதாய் நினைக்கிறேன். பரிசுகளைவிட, ஒருவர் தன் உணர்வுகளை ஒரு கவிதை அசைப்பதாகக் கூறுவதே அக்கவிதையின் ஆகச்சிறந்த அங்கீகாரமாகக் கருதுகிறேன். புலம் பெயர்ந்தவர்கள் பற்றி நான் எழுதிய கவிதையொன்று, என் பிறந்த ஊர்விட்டு புலம்பெயர்ந்த பலரை என்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. அதையே முதல் அங்கீகாரமாகச் சொல்வேன். விருது எதுவும் இதுவரை பெறவில்லை. தண்ணீர் தேசம் –வைரமுத்து புதினங்களை மட்டுமே வாசித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் கவிதை வடிவத்தில் எழுதப்பட்ட புதினமாக இருந்த தண்ணீர் தேசம், என் வாசிப்பைக் கவிதைகள் பக்கம் திருப்பக் காரணமாய் இருந்தது. “ஓர் ஆணியைச் சுயமாய் அடிக்கத்தெரியாதவளுக்கு வெள்ளிக்கரண்டி சொந்தமாய் இருக்கக்கூடாது அனுபவங்கள் தடுப்பூசிகள் போட்டுக்கொள்.”
அன்றில் இலக்கிய சுற்றம் பேராசிரியர்.மானசீகன் முன்னிலையில் எழுத்தாளரும் திரைக்கலைஞருமான திரு.மீரான்மைதீன் வெளியிட என் தந்தை பெற்றுக்கொண்டார். மறக்க முடியாத மகிழ்ச்சியான நிகழ்வு.