cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

அன்பின் சாட்சி


வ்வளவு பழக்கமில்லாத
அந்த தூரத்துப் பணக்கார உறவின்
கல்யாணத்துக்கு
குடும்பசகிதமாகப் போக மனமின்றி
தான் மட்டும் புறப்பட்டு
நூறு ரூபாய் மொய் எழுதி
பள்ளிக்கூடத்துக்குப் போன புள்ளைக்கு
ஒரு வாய் இனிப்பு கொண்டுவரலாம் எனச்
சிறிய டப்பா ஒன்றைப்
பையில் மறைத்துக் கொண்டு போன
அமுதாவின் காதில்
“யாருக்கும் பொட்டலம் கொடுக்காதீர்கள்” எனச்
சமையல்காரரிடம் யாரோ சொன்ன வார்த்தை
காதில் வந்து விழ,
செய்வதறியாது பந்தியில் அமர்ந்து
தனக்கு வைத்த இனிப்பைப்
பிள்ளையின் பொருட்டு
சேலையின் தலைப்பில் முடிந்துகொண்டாள்
யாரும் பார்க்காத அந்நிகழ்விற்கு
ஒட்டிக்கொண்ட
சிறுநூல் மட்டும்
சாட்சியாகிப்போனது..!!


 

About the author

மதுரை சத்யா

மதுரை சத்யா

மதுரையில் பிறந்து வளர்ந்த மதுரை சத்யா தற்போது கனடாவில் இளங்குழந்தைகளின் ஆசிரியராக பணிபுரிகிறார் குழந்தைகளுக்கான மனநலன் கட்டுரை மற்றும் மனித உளவியல் தொடர்களை பல்வேறு வெகுஜன இதழ்களிலும் எழுதி வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website