cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

பிறவிக்கடன்


ல்லாவற்றுக்கும் விலை 

நிர்ணயிக்கப்பட்ட உன் தேசம்

என் கவிதைகளை

நிர்வாணப்படுத்தி

மலம் துடைக்கிறது.

பல முகங்கள் பற்பல காட்சிகள்

கூட்டு வன்புணர்வு 

சிதைந்து தொங்கும்

யோனி பீடம்,

காலை வணக்கமும்

மாலை கொஞ்சலும்

இரவு கெஞ்சலும்

தின்றுதின்று செரிக்க முடியாமல்

வாந்தி .

யுகங்களாக வேட்டையாடிய

பல்லிடுக்குகளில்

சிக்கிக்கொண்டிருக்கும்

கால ஜென்மத்தின்

கருமுட்டை. 

ஹே சென்னிமல்லிகார்ஜூனா

குத்தி எடுத்து

துப்பித் தொலை.

கருக்கலைத்தேனும்

விடுதலை பெறட்டும்

பிறவிக்கடன்.


 

 

About the author

புதிய மாதவி

புதிய மாதவி

புதியமாதவி- மும்பை தமிழ்ச் சமூகத்தின் நான்காவது தலைமுறை தமிழர். மும்பை பன்னாட்டு வங்கியில் 22 ஆண்டுகள் பணி செய்து விருப்ப ஓய்வுப் பெற்றவர். சிறுகதை ,நாவல், கவிதை, மொழியாக்கம் , இலக்கிய விமர்சனம், சமகால அரசியல் என தன் எழுத்தே இயக்கமாகக் கொண்டு பயணிப்பவர் .

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website