cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

புத்தகம்


கவலை மேகம்
கண்களை மறைக்கும் போது
சல்லடையாய் கவலைகள்
சலித்தெடுக்கும் போதும்

பூட்டிய உணர்வுகளுக்குள்
உருளாமலும்
மௌனத்தினுள் உறைந்து
போகாமலும் இருக்க

என்னைப்
புத்தகத்தின் மடியில்
கிடத்திக்கொள்வேன்

அது
என் தோள் சாயும்
ஒற்றைத் தூண்
என் கற்றை சுகம்
என் கவலைகள் அகற்றும்
திரிசங்கு சொர்க்கம்

ஒற்றை வாழ்வு
சலிப்புத் தட்டினால்
சற்றே உலவி  வரலாம்..
புத்தகப் பூஞ்சோலைக்குள்
அது தரும்
புது உற்சாகம்..!!


About the author

ராஜலெட்சுமி பாண்டியன்

ராஜலெட்சுமி பாண்டியன்

கணித ஆசிரியை ; பெரம்பலூர்

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
கீழை.நிலாபாரதி

சிறப்பு

You cannot copy content of this Website