cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 5 கவிதைகள்

ஜிம்னோஸ்பெர்ம் கவிதை


சொற்தழல்
மழைத்துளி கோர்த்துக்
குதிக்கும்
தனிமை சொட்டும்
அனல் குமிழின் முகத்தில்
அவரவரின்
கண்ணாடி முகங்கள்
தேநீராவியின் கொண்டையூசி
வளைவுகளில்
தொண்டைக் குழிக்கு
எப்பக்கமாவது
துடிதுடித்தபடி
சேரா ஞாபகங்கள்
மெய்யெழுத்து
நெற்றிப் பொட்டில்
அரும்பி
ஜிம்னோஸ்பெர்ம் கவிதைகளுக்குள்
ஆஞ்ஜியோகிராம்
நிகழ்த்திவிடுகிறாய்.

About the author

Avatar

தென்றல்

கோபிசெட்டிபாளையம் ஊரைச் சார்ந்தவர். அறிவியல் தொடர்பான தேடல் உடையவர் என தெரிவிக்கும் இவரின் 'கொங்காடை மனிதனின் நீரடித் தடங்கள்' எனும் முதல் கவிதைத் தொகுப்பை வாலறிவன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website