சில நாட்களுக்கு பிறகு
யன்னலை திறந்து வைத்தேன்.
நிறைந்திருந்த
புழுக்கங்களை வாரி வெளியே கொட்ட முடிந்தது.
நிறைய நிறைய காற்று
மறைப்புகளற்ற நாசிக்குள்
புகுந்து
சீராய் நெஞ்சுக்கூட்டை நிரப்பிக்கொண்டது.
குறுக்கும் நெடுக்குமாய் கசிந்து கிடந்த அறையிருட்டில்
மொத்த அயர்ச்சிகளையும் களைந்து போக உள்ளிறக்கும்
நிறகுளிசைகளிலிருந்து சிறு விடுதலைதான்.
எப்போது எது காவிக்கொண்டுபோகும்
எனும் பயங்கள் இருப்பினும்
கொஞ்ச நேரம் திறந்தே கிடக்கட்டும்
என் ஜன்னல்கள்.