cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைக் களம்

முருக தீட்சண்யாவின் கவிதை


மேகத்துக்கு மேலேயும்
ஒரு பறவை
பறந்தது
பறவைக்கு கீழேயும்
ஒரு வானம் இருந்தது

தூரத்து அகல் விளக்கில்
இரு விட்டில்கள்
துடித்து கொண்டிருந்தன
எனக்கு அகல் பிடிக்கும் என்றாய்
எனக்கு விட்டில்கள் என்றேன்

ஏனென்றாய்
விட்டில்கள் ஒரு போதும்
ஆறாம் அறிவோடு யோசிப்பதில்லை
மரணத்தின் ஒளியை
ஆனந்தமாய் முத்தமிடுகின்றன

“ஆஹாங்”
தலையாட்டி இரசித்தபடியே
கருகிய விட்டிகளில் ஒன்றை
கைகளில் தந்தாய்

அகலும் பிடிக்கும் என்றேன்,
வியப்போடு பார்த்தாய்,
அகல் தான் இரவுக்கும் பகலுக்குமான
இரகசிய ஒப்பந்தத்தை உடைக்கிறது,

இந்த குறைந்த ஒளியில் தான்
உன் கண்கள்
கனிந்த நாவல் பழத்தைப் போல
மேலும் கனிவை சுரக்கின்றன,

சிரிக்கத் தொடங்கினாய்
இடைவெளியின்றி,
சில விட்டில்கள் கருகிய மணம்
காடெங்கும் பரவியது.


பரிதி பதிப்பகம் வெளியீடான  முருக தீட்சண்யாவின்  “நீர்மையின் சாம்பல் சித்திரங்கள்” கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கவிதை இது.

Published with permission of the author, Muruga Deetchanya

 

 

About the author

முருக தீட்சண்யா

முருக தீட்சண்யா

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ‘கீரனூர்’ கிராமத்தை பூர்வீகமாக கொண்ட முருகதீட்சண்யா, தற்போது வசிப்பது மயிலாடுதுறையில். வணிக நிறுவனமொன்றில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிகிறார். “நீர்மையின் சாம்பல் சித்திரங்கள்” எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார். இவரின் கவிதைப் படைப்புகள் சொற்கள், காக்கைச் சிறகினிலே, புதுப்புனல், கணையாழி போன்ற இலக்கிய இதழ்களில் வெளிவந்திருக்கிறது.

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
J.Adalarasan

அருமை

ரஞ்சித் குமார்

அருமை❤️

You cannot copy content of this Website