cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 6 கவிதைகள்

பிரபஞ்ச மொழி


செவித்திறனுக்கு அப்பாற்பட்ட
மென்சத்தத்தில்
மொழித்திறனுக்கு அப்பாற்பட்ட
அடர்வார்த்தைகளால்
பெருங் கருணையோடு
ஓயாமல் உங்களுடன்
பேசிக் கொண்டேதானிருக்கிறது
இந்தப் பிரபஞ்சம்..
நீங்களதைக்
கேட்டுப் புரிந்துகொள்ள..
உங்கள் செவிச் சவ்வுகளின்
கிழிசல்களையும்
மூளை மடிப்பணுக்களின்
சுருக்கங்களையும்
சரி செய்யுங்கள்..
முடியாவிட்டால்..
வெம்மையுமிழும்
பகற் பொழுதுகளில்
மொட்டை மாடியில்
ஒரு கிண்ணத்தில்
கொஞ்சம் நீர் வையுங்கள்
போதும்..

About the author

கீர்த்தி கிருஷ்

கீர்த்தி கிருஷ்

இலங்கை திருகோணமலையைச் சார்ந்தவர். தற்போது சென்னையில் வசிக்கிறார்.
புதுக்கவிதைகள் ஹைக்கூகள் மற்றும் சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்க்கும் இவரின் படைப்புகள். பல பிரபல இதழ்களில் கவிதைகள் வெளியாகியிருக்கின்றன.
"வெளிச்சக் குளத்தின் நீர்த்தாரைகள்" எனும் முதல் கவிதை நூலை வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website