cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 6 கவிதைகள்

விட்டில் மனங்கள்


தூயக்காற்றை சுவாசிக்க விதை போட்டு,
செடி நட்டு
வேலியமைத்து
சோலைக்காட்டு பொம்மையாய் நிற்கிறது
வேண்டுதலின் முடிவில்
வெறும் வைக்கோல் திணித்த மனங்கள் பல…….!

மண்வெட்டி கணம் கொண்டு
வெட்டி சாய்த்து
நிலத்தை காயப்படுத்தி
தொடர்ந்து நீர் ஓட
வழிசெய்து மனங்குளிர வைக்கிறான்
சேற்றை புத்தாடை ஆக்கிய
புதிய மனிதா பூமிக்கு வா வானோலி பாடலை பின்னலையில் கொண்ட விவசாயி…..!

நம்பி ஏமாற்றம் பெற்று
மீண்டும் நம்பி மனம் தளர்ந்து
மொத்தமும் இழந்து
கண்ணீர் வற்றி
கை நிறைய மண் ஏந்தி
வாரி இறைக்க இயலாது
தலையில் போட்டு நகர்கிறான்
நம்பிக்கையின் நிழலில் சில நேரம்
பயணிக்கும் துரதி்ஸ்ட மனங்கள்……!


Courtesy : (Artist Name Unavailable)

About the author

கார்கவி

கார்கவி

பொறியியல் பட்டம் பெற்ற கார்கவி கவிதை, கட்டுரை, நடனம் ,பேச்சு என கலை இலக்கியப் படைப்பாக்கங்களில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்
கவிதைகளில் ஹைக்கூ உள்ளிட்ட வகைமைகளை எழுதுவதாக தெரிவிக்கும் இவர் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் சில நூல்களை மின் நூலாக வெளியிட்டுள்ளார். அச்சு இணைய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருதுகள் பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website