cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 6 கவிதைகள்

ஷக்தி கவிதைகள்

ஷக்தி
Written by ஷக்தி

1

திசைமானியற்று பாசிகள் மிதக்கும் கழிமுகப்பகுதிக்கு திரும்புதல் என்பது
பூமியின் அன்பின் தொடுகையின்
சூட்சும கயிறென
கொடுப்பினை வாய்த்ததென நான் அறிவேன்
இந்த கடல் அறியும்
பாவமோ வெட்கமோ இல்லாமல் பிரக்ஞையற்று
இந்த நிலக்கரி தூசு சாம்பல்களை உயர்ந்த அலகுகள் உமிழ
அந்த நிசப்த நசநசப்புக்குள் எச்சமென ஆயுள் கசிய
கரைவருதல்
உள்பதிந்த சுடரின் நிரந்தர இயல்பு.


2

மாரிரண்டுக்கும் நடுவே அம்மாவுக்கு கொடும் வலி
உலர்ந்த பகலில் அவளுடலுக்குள் ஒரு அபூர்வ குளிர்
கைகளை இடுக்கி ஒடுங்கி விறைத்து கிடந்த நாளில்
அது சாம்பல் பூத்த காற்றின் அழைப்பென்றார்கள்
உண்மையில் இது
ருசிக்கையில்
மேய்ப்பன் புறந்தள்ளும் ஆட்டின் கேவலை போன்றது.


Art Courtesy : glubbs.tumblr.com

About the author

ஷக்தி

ஷக்தி

தஞ்சை மாவட்டம் திருத்துறைப் பூண்டியைச் சார்ந்த கவிஞர் சக்தி யுவபுரஸ்கார்-2020-க்கான விருதை ‘மரநாய்’ கவிதைத் தொகுப்புக்காக பெற்றவர். இவரின் ‘அபோர்ஷனில் நழுவிய காரிகை’ கவிதைத் தொகுப்பும், ‘கொண்டல்’ நாவலும் வெளிவந்திருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website