cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

குதிரைக்காரி


சிவப்பு,  மஞ்சள், பளுப்பு

என எதுவும் நிறுத்தாது அவளை

வடிவற்ற எந்த வடிவிலும்

எந்த தளத்திலும் எப்படியேனும் 

ஒரு குதிரையை வரைந்து

உயிரோடு கொணர்ந்திடும்

சாகசக்கார தோழி அவள்

பிடரி மயிர் சிலிர்க்க

கால் தசைகள் அதிர

ஓடியபடியே இருக்கும்

கட்டற்ற அதன் குணமே

தனக்கு பிடிக்கும் என்பாள்

இருபது வருடம் கழித்து

இப்போது தான் பார்க்கிறேன்

இன்னும் வரைகிறாயா என்றேன்.

சவாரி குதிரைகளை 

வரைவது தண்டனை என்கிறாள்.


 

About the author

மைதிலி கஸ்தூரிரங்கன்

மைதிலி கஸ்தூரிரங்கன்

அரசுப்பள்ளி ஆசிரியர், புதுக்கோட்டை த.மு.எ.க.ச மாவட்டக் குழு உறுப்பினராக உள்ளார். இவரின் கவிதைப் படைப்புகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
மீரா செல்வக்குமார்

கவிதைகளில் நல்ல முதிர்ச்சி…
வாழ்த்துகள்

விடுதலைக் குதிரைகளாய்த் திரியும் பெண்கள் மணமான பின் செலுத்துக் (சவாரி) குதிரைகளாய் மாறிப் போவதை, திருமணம் பெண்ணுக்கான கடிவாளமாய் அமைந்து விடுவதை இதை விட நுட்பமாகச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை! வெகு ‘நுட்பமான’ கவிதை!

You cannot copy content of this Website