தினமும் அவனை
பார்க்கிறேன்
சிறுவன்தான்
கல்லூரி உணவகத்தில்
கையாள் உத்தியோகம்
தள்ளு வண்டியை
இழுத்தபடி மிச்ச இலைகளை
சேகரித்து கைகளைக் கட்டி
மௌனமாய் நிற்பான்..
அவன் உடைகளில்
பிரபஞ்சம் கிழித்து
வைத்திருக்கும்
குடுப்பத்தின் வறுமை
ஆர்ப்பாட்டம் செய்யும்
ஏதொன்றும் பேசான் !
அவன் வார்த்தைகளையும்
நல்ல விலைக்கு
வாங்கியிருப்பான்
முதலாளி
என் அருகில் வருவான்
என் எச்சில் இலையை
எடுக்க முயல்வான்
தடுமாறியபடியே
தடுப்பேன்..
புன்னகைத்தபடி
பறித்துக்கொள்வான்
இலையை.
நானும் பதிலுக்கு
புன்னகைப்பேன்
அவனுக்கு கொடுப்பதற்கு
புன்னகையைத் தவிர
வேறென்ன இருக்கிறது
பெறுமதியாய்
இந்தப்பிரபஞ்சத்தில்..
மிகவும் அருமையான வரிகள் தோழர் மனதைத் தொட்ட வரிகள்…… 💘
மேன்மேலும் கவி புனைய வாழ்த்துக்கள் நண்பா..