cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

புனிதன் கவிதைகள்


அம்மாவின் குரல் 
வெளி
மழை
வாசனை
துளிர்
இருள்
சோலை
நதியோசை
பூப்பூக்கும் மெல்லிய
இசை
ஒளிந்து கொள்ளும்
தவளை சப்தம்
குறளி பிசாசு மறு அவதாரம்
கசாப்பு ஆட்டின் ஈன குரல்
அம்மாவின் குரலில்
அத்தனையும்
ஒளிந்து உள்ளது.

புத்த பூனை

அரண்மனை
கதவை சாத்தி இருந்தால்
பூனை உள்ளே போயிருக்காது

உள்ளே போன பூனை
எலிகள் பிடிப்பது மூலம்
ஆசையை சித்தார்த்தன்
கற்று இருக்க மாட்டான்

ஆசையே துன்பத்திற்கு
காரணம் என
பூனை முகத்தில் கீறல்
ஏற்பட்டு இருக்காது

ஆசை துறந்த பிக்கு போல்
தோட்டத்தில் பூச்செடிகளை
சுற்றி வரும் பூனை.


Courtesy : painting – catinatux.tumblr.com

About the author

க. புனிதன்

க. புனிதன்

இளங்கலை நுண்உயிரியல் பட்டத்தாரியான இவர் தர்மபுரி மாவட்டம் h. புதுப்பட்டி கிராமத்தை சார்ந்தவர். விவசாயம் தொழில் செய்து வருகிறார் இது வரை ஹைக்கூ நூல், ”கோழி கொண்டை பூவும் , கொஞ்சம் தேநீரும்” ஆகிய நூல்கள் வெளியாகி உள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website