cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 8 கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

கண்ணன்
Written by கண்ணன்

  • கருணையற்ற கடவுள்

சின்னக் குழந்தை
சற்றே பெரிய குழந்தையிடம்
சொன்னது:
‘அம்மா சொன்னாங்க:
கொஞ்ச நாளுல நானும்
ஒங்கள மாதிரியே
சேல கட்டி
நெறய நகை போட்டு
நெறய இனிப்பு சாப்புடுவன்
அந்த ரூம்ல’
பெரிய குழந்தையுடன்
இப்போது சின்னதுக்கும்
சேர்த்து அழுகிறேன் நான்.

  • அப்பாவின் வேலை

அம்மா சொல்வாள்: ‘ஆபிசருன்னு சொல்லிதான் ஒங்கப்பாவக் கட்டுனாங்க’
வாழைத்தாரும் தேங்காயுமாய் காவிரியோடும் மோகனூர் ஆசிர்வதித்தது அப்பாவை
இத்தனைதூரம் சைக்கிள் மிதிக்கிறானே பச்சாதாபத்தில் பரிவுகாட்டியது பனமரத்துப்பட்டி
தனயனைப்போல் தலைகோதியது தலைவாசல்
அன்புகாட்டி நெருக்கமானது அயோத்தியாபட்டினம்
பலமுறை எழுப்பிடும் மேசையில் தூங்கிடும் அப்பாவின் குறட்டை
இன்னா செய்தாரை குறள் சொல்லி மேலாளரை மன்னித்து மாலையுடன் ஓய்வுபெற்றார் ஒருநாளில்
தம்பியின் பத்திரிகை போகாதது அலுவலகப் பதிவேட்டில் பெயரில்லாதோருக்கு மட்டுமே
‘அண்ணனுக்கு ஒங்க வேலை பார்க்கலாமே?’
காலத்தின் கசப்பையெல்லாம் விழுங்கியபடி தலைகுனிந்து சொன்னார் அப்பா:
‘விடியவிடிய எழுதனும், அவமானம் அதிகம், என்னோட போகட்டும்,
வேணாம்ப்பா அண்ணனுக்கு’.

 

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website