- அம்மாவின் தன்மானம்
வாழை
தன் கவிதையை
வெளியீட்டு இருந்தது
வருடத்திற்கு நான்கைந்து
கவிதைகள் வெளியீடும்
அதன் தொகுப்பில்
ஒரு பறவையின் எச்சம்
வாழை இலையில்
அதன் கவிதையை
அழகாக்கி இருந்தது
குலை தள்ளிய
வாழையின் செவ்வியியல் கவிதை
பாத்திரம் கழுவும்
தண்ணியில்
அதை வளர்க்கும்
அம்மாவின் தன்மானம் அது
வானத்தின் வீரமும்
பறவைகள் காதலும் என
தொல்லியல் கவிதை.
- முட்டாள் கண்ணாடி
கண்ணாடி பார்த்து தன் உருவத்தை கொத்தும்
சேவல் போலவும்
தன் வாலை பிடிக்க
சுற்றி சுற்றி வரும்
பூனையை போல்
கண்ணாடி பெட்டியை
கடல் என்று எண்ணிக் கொள்ளும்
வண்ண மீன்கள் போல்
நல்ல குருவிடமே
சீடனின் முழுமையான
முட்டாள்தனம் வெளிப்படுகிறது.
- வள்ளலாரின் பூனை
ஆப்பிள்
புவிஈர்ப்பு விசையை
மட்டும் அல்ல
பசியும் கற்று தந்தது
டிஸ்னி கனவில்
எலி பூனையை மட்டுமல்ல
பசியும் துரத்தியது
புத்தன் ஞானத்தை விட
பசி பெரியது என
தன் வாழ்நாளில் உணர்ந்தார்
வள்ளலாரின் பசித்த பூனை
எல்லோர் வீட்டு அடுப்பிலும்
உறங்குகிறது.