உறவுலை
உறவுலையில் நான் வேக
கண்ணீரே கொதிநீராய்
சிப்பில் தட்டில்
வடுமறைத்த
கள்ளியிவள் மனமது
சுள்ளிகளாய் புகைந்திட
சூளை சூட்டில்
தோலுரித்து
சதை சமைதிடவிணையாய் சூளுரைத்து
ரணம் ரசிப்போர்
எத்துணைப்பேர் நளனிவர்கள்
எனை வெறுத்து சமைத்திடும்
விருந்துணவும் ருசித்திடுமோ…….
மனிதன்
யாரோ என்னை பார்க்கிறார்கள் சிரித்து வைப்போம்
யாரோ அங்கு புன்னகைக்கிறார்கள் பேசி தொலைப்போம்
யாரோ ஒருவர் பின்தொடர்கிறார் வழி காட்டிடுவோம்
யாருமற்ற இருளறியும்
யாரோ யாரோ என்று
யாரோ வேண்டும் இங்கு
யாவரும் மனிதன் என்று காட்டிக்கொள்ள…..