cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

கண்ணன்
Written by கண்ணன்

மீள் நினைவு

 

ஏதோவொரு இடம்

ஏதோவொரு புத்தகம்

ஏதோவொரு பாடல்

ஏதோவொரு ஓவியம்

பார்க்கையில் கேட்கையில் 

தொடுகையில்

உள்ளுக்குள் உடைப்பெடுத்து

ஆழிப்பேரலையாய் 

நினைவுகள் மேலெழுந்து

உடல் குலுங்கி விசும்பலுடன்

விழியோரம் கண்ணீர் 

வழிந்தோட 

கணத்தில் உறைந்து போய்

நிற்கின்ற தருணத்தில்

அருகிலுப்பவர் என்ன ஆச்சு

எனப் பதற

ஒண்ணுமில்ல, கண்ணுல

தூசி என்கிறீர்கள் 

கண்களைத் துடைத்துக் 

கொண்டே .


தொழில்

 

கடைசியெனத் தெரிந்தும் 

கலந்து கொள்கிறேன்

காந்திக் கணக்கு எனத் 

தெரிந்தும் சுழி போடுகிறேன் 

சூதாட்டமெனத் தெரிந்தும்

பகடை உருட்டுகிறேன்

குருவிபோலச் சேர்த்ததை

அடிமாட்டு விலைக்கு

அள்ளிக்கொண்டு போவதை

நீரெல்லாம் வற்றிப்போய்

வறண்டு போன விழிகளுடன்

நீண்டநேரம் பார்த்தபடி

வெறுமனே நிற்கிறேன்

மீண்டும் மீண்டும்

முட்டி பெயர்ந்து

ரத்தம் வழியினும்

மண்ணள்ளிப் பூசிக்கொண்டு

பாழாய்ப்போன மனசு

மீண்டும் கேட்கும் அதே கேள்வியை

அடுத்தது எப்போ?


 

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website