cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

ஜோதி சரண் கவிதைகள்


ம்பளிப்புழு பருவம் மரபணுவில் பதிந்து தரும்
வெம்மையோ!!
சிறகு முளைத்த பின்னும்
சிறு சறுக்கலுக்கும்
குறுக்கிக் கொள்ள
வட்டம் தேடித் தேடி
சுருக்கிட்டுக் கொள்கிறது
ஏதோ ஒரு விட்டத்தில்..

பிரார்த்தனை கூடத்தில்
ஜெபத்தின் முடிவில்
கூறிக் கொள்கிறோம் ஒருவருக்கொருவர்
சமாதானம்!!

பிறர் கூறும் சமாதானம்
பிறரை ஏற்றுக் கொள்வதற்கு!!
என்றாவது நமக்கு நாமே சமாதானம் கூறிக் கொள்கிறோமா!!

நம்மை ஏற்றுக் கொள்ள பிறரிடம் காரணம் காரியம் விளக்கி விடுகிறோம்!
நமக்குள் நாமே விலங்கிடாமல் இருக்கின்றோமா!!

சரியோ தவறோ
கவலையோ களிப்போ
நமக்குள் நாம் கூறித்தான் பார்ப்போமா ஒரு சமாதானம்!!

மாற்ற முடியாததை ஏற்று
மறக்க முடியாததை மன்னித்து
நம் சுயத்திற்கு நாம் தரும்
ஆகச் சிறந்த தானம்
சமாதானம்!!


 

About the author

ஜோதி சரண்

ஜோதி சரண்

தேனி மாவட்டம்- கம்பத்தை சார்ந்த ஜோதி சரண் கணிதத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் “Kanitham with koffee எனும் காணொளிச்சேனல் தொடங்கி கணிதம் கற்றுத்தரும் ஆசிரியராக பணிபுரிகிறார். இது வரை மலர்கள் தீட்டிய வரைவுகள், இமயம் தொடும் இயைபுகள், நிழல் உதிர்க்கும் இலைகள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்பு நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு அச்சு மற்று இணைய இதழ்களில் இவரின் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website