cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

போஸ் கென்னடி கவிதைகள்


கொல்லைப்புறத்தில்
செத்துக்கிடந்த அப்பனை
தூக்கி வந்து முற்றத்தில் கிடத்திவிட்டு
அடுப்பாங்கரை நட்டத்தில்
அவசரமாக குழித்தோண்டி புதைக்கிறேன் அழுதுகொண்டே
பால்டாயில் டப்பாவையும், சாராயப்பாட்டிலையும்….

திரருவாள் போல
கன்னத்தில் படர்ந்திருக்கும்
காதோர சுருண்டமுடி

தேசியகொடி போல்
நெற்றியில் தீட்டப்பட்டிருக்கும்
கலர் பொட்டுகள்

பனம்பழம் போல்
மார்பில் உருண்டுக்கொண்டிருக்கும்
முலைக்காம்புகள்

மல்லிகை பூ போல்
கக்கத்தின் வாசனைபரவியிருக்கும்
வேர்வைத்துளிகள்

தேய்பிறை போல்
வளைந்து சுழித்து புன்னகைக்கும்
செவ்விதழ் அதரம்

அத்தனையும் உன்னிலும்
அவளின் சாயல் நீ….

செத்துபிழைத்தவர்கள்

அரக்கபறக்க
அலுவல் பணிக்கு
அணிகத்துடன் வேகமெடுக்கையில்
அனிச்சை தும்மலிலும்,
அறிமுகமாகும் மாந்தர்களின் வினாவுதலிலும்
ஓர்மையில் வாழ்ந்துபோகிறார்கள்
ஆலத்தில் மாய்ந்துபோன அம்மாவும், அப்பாவும்.


 

 

About the author

போஸ் கென்னடி

போஸ் கென்னடி

திருநெல்வேலியைச் சார்ந்த சுபாஷ் சந்திர போஸ் கென்னடி “போஸ்கென்னடி” எனும் புனைப்பெயரில் அறிமுகம் ஆகியுள்ளார். பட்டதாரியான இவர் சென்னையில் தற்போது வசித்து வருகிறார். பல்வேறு சர்வதேச விருதுகளை வென்ற ”நந்தன்” என்கிற குறும்படத்தின் இயக்குநர். திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website