cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

புதியதோர் அரிகாரம்


வானத்தைப் பார்த்து
பறக்க நினைக்கிறேன்
வாழ்க்கையை சிறகென
கையில் கொடுத்தனர் பெற்றோர்

என் கேள்விக்கு
பதில் இல்லாத இடத்தில்
தாழிடப்பட்டது புதியதோர்
அரிகாரம் பூசிய மொழி

ஒற்றைப் பருக்கைக்கு
முழுங்கால் முழுதும் சேறு
வரப்பு இருப்பதால்
வண்ணமாகிடாது வேறு

தடம் பதித்த இடத்தில்
இன்றும் சிறு ஈரம்
பயமென்பதை வெற்றியாக
மாற்றியவர் பாதத்தில்

உறவுகளின் பார்வை
வௌவாலின் தலைகீழி
இருளை கிழிக்கும்
அறியாமை உயிரினமாய்.


 

About the author

கார்கவி

கார்கவி

பொறியியல் பட்டம் பெற்ற கார்கவி கவிதை, கட்டுரை, நடனம் ,பேச்சு என கலை இலக்கியப் படைப்பாக்கங்களில் ஆர்வமும் ஈடுபாடும் உடையவர்
கவிதைகளில் ஹைக்கூ உள்ளிட்ட வகைமைகளை எழுதுவதாக தெரிவிக்கும் இவர் மூன்று நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் சில நூல்களை மின் நூலாக வெளியிட்டுள்ளார். அச்சு இணைய இதழ்களில் இவரின் படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. பல்வேறு இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருதுகள் பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website