cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 9 கவிதைகள்

புனிதன் கவிதைகள்


அரசியல் பேசுகிறேன் நான்

எனக்கு மூன்று மாடுகளும்
ஐந்து ஆடுகளும் உள்ளன
இனக் குழு அரசியல் செய்கிறேன்
நான்

ஆழ்துளை கிணறு
உள்ளது எனக்கு
நான் தண்ணீர் அரசியல் செய்கிறேன்

மொண்டு ஊத்த
மொண்டு குழி தண்ணீர் தான்
உள்ளது என்னிடம்
இரண்டு வேப்ப மரங்களும்
பத்து தென்னை மரங்களும்
உள்ளது
நான்
உலக வெப்பமாயதல்
அரசியல் பேசுகிறேன்

ஜென்னும் சூஃபியும் பிடிக்கும் எனக்கு
மத அரசியல் செய்கிறேன்
நான்

சமையல் கட்டில் தேநீர் போடுகிறேன்
என் வட்டலை சாப்பிட்ட பின்
நானே கழுவுகிறேன்
பெண் அரசியல் பேசுகிறேன் நான்

உடல் வன்மம் இல்லாத
வெள்ளந்தி மனிதர்கள்
என்னிடம் உள்ளனர்
கவிதை அரசியல் பேசுகிறேன் நான் .

தனிமை வெளி

குளிர் பனிக் காலம்
அணைந்த சிம்னி அடுப்பை
சிலந்தி பூச்சி கடந்து செல்கையில்
அரசியல் வகுப்பை கற்றவன்
கிராமத்துக்கு திரும்பி
செல்கையில்
கிளை முறிந்த மரத்தில்
பூ பூத்த இடத்தில்
வண்ணத்து பூச்சி அமர்ந்து இருப்பதை
பார்க்கையில்
மனம் ஏனோ பதறுகிறது.


 

About the author

க. புனிதன்

க. புனிதன்

இளங்கலை நுண்உயிரியல் பட்டத்தாரியான இவர் தர்மபுரி மாவட்டம் h. புதுப்பட்டி கிராமத்தை சார்ந்தவர். விவசாயம் தொழில் செய்து வருகிறார் இது வரை ஹைக்கூ நூல், ”கோழி கொண்டை பூவும் , கொஞ்சம் தேநீரும்” ஆகிய நூல்கள் வெளியாகி உள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website