கிளையில் சாவகமாக உட்கார்ந்திருக்கும்
வண்ணத்து பூச்சியொன்றை
யாருக்காகவாவது காத்திருக்குமென்று
நினைத்து கொள்வதில்
மறந்து போகிறது
எழுத நினைத்த கவிதையொன்று
பிறந்தநாளில்
தன்னை அலங்கரித்துக்கொள்ள
நினைக்கும் சேரிக்குழந்தை
சிதறுண்டு கிடக்கும்
கடதாசிப் பூக்களை
சூடிப் பார்க்கிறாள்…
கலர் கலராய் வீதியில்
சிதறுண்டு கிடக்கும்
கடதாசிப் பூக்களில்
இப்பொழுதுதான்
அமர்ந்து கொள்கின்றன
வண்ணத்துப் பூச்சிகள்.