cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைகள்

அப்பாவின் சைக்கிள்

கண்ணன்
Written by கண்ணன்

அகிலம் சுமப்பவன்தான் அப்பாவுக்குப் பிடிக்கும்

சைக்கிளில் பள்ளிக்கு அப்பாவுடன் வருவது தனிவிமானத்திற்கும் ஈடாகாது

எண்ணெய் ஊற்றுவது அண்ணன்

துடைப்பது எங்கள் பணி

பஞ்சர் ஒட்டிய அண்ணன் எங்களுக்கு விஞ்ஞானி

புதுசீட்டும் மணியும் பட்டையும் குங்குமமும் ஆயுதபூஜையும் தீபாவளிதான்

குரங்குபெடல் முடித்து சீட்டுக்கு வந்தவுடன்

பறவையாய் மாறி லாரியில் மோதியதும்

நடந்ததெனக்கு (‘சாவறதுக்கு என் வண்டியா கெடச்சது)

நிறுத்தத்திலிருந்து வீட்டுக்கு வந்தவர்

அலுவலகத்திற்கும் ஆரம்பித்தார் தினமும் பல மைல்கள்

மிதித்த கால்கள் ஓய்ந்த போதும் பைகள் மாட்டி தள்ளி வருவார்

துள்ளத்துடிக்க தோட்டம் போனதும் சைக்கிளும் போனது துருப்பேறி.


 

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Ms.Sarojini Kanagasabai

அற்புதமான கவிதை தோழர்

You cannot copy content of this Website