cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 11 கவிதைகள்

எஸ்தரின் ஒரு கவிதை

எஸ்தர்
Written by எஸ்தர்

கைவிடப்பட்ட ஆட்டுரலின் குழியில்
தேங்கி நிற்கும் மழை நீரென
தேங்கி கிடக்கும்
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள
பிரியத்தைப் பார்க்கிறேன்

மழை இல்லைதான் காட்டு வெள்ளாமைக்கும்
வயிற்றில் ஈரத்துணிக் கட்டி காடுவெட்டியவனுக்குமே
வெம்மை என்னவென்று தெரிகிறது

ஒரு நொடி மின்னலென
ஒரு சூனியக்காரியின் பயமுறுத்தலென
மேகத்தை துடைத்து விட்ட வானம்
வெளிறிக்கிடக்கிறது

நீ
மழை
பருவம் தவறாதிருக்கட்டும்.


 

About the author

எஸ்தர்

எஸ்தர்

இலங்கையின் மலையக மண்ணைச் சேர்ந்தவர் எஸ்தர் . மலையகத்தில் அட்டன் – டிக்கோயாவை பிறப்பிடமாகவும் திருகோண மலையை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார் அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் உயர்கல்வியையும் பெற்று; பேராதனை பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் கலைமாணிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியலில் டிப்ளோமாவையும் முடித்து தற்போது இலங்கை அரசின் முக்கிய பதவியில் பணியாற்றுகிறார்.

சென்னை – போதிவனம் பதிப்பகம் வெளியிட்ட இவரின் முதல் கவிதைத் தொகுப்பான“கால் பட்டு உடைந்தது வானம்” ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கானதொரு தனியிடத்தைப் பதிவு செய்தவர். இவரின் மற்றொரு கவிதைத் தொகுப்பு “பெரு மலை வெடிப்புகள்” பூபாளம் புத்தகப் பண்ணை பதிப்பகம் மூலமாக வெளியானது. இலங்கையின் மலையகத் தமிழர்களின் சவால் மிகுந்த வாழ்வியலையும் வலிகளையும் அவர்கள் உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதையும் “பெரு மலை வெடிப்புகள்” தொகுப்பிலுள்ள கவிதைகளின் கருப்பொருளாக உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website