cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

சன்னமான ஒளி, இருள், மௌனம்.


1.

சன்னமான ஒளியை,

வெயிலை

நிழலை

அல்லது ஒரு மௌனத்தைக்

கடந்து போகிறேன்.

 

மரணத்தை

கிளையிலிருந்து வீழும் சருகெனக்

கடக்கிறேன்.

வெளியெங்கும் வெளியே.

நிழலெங்கும் நிழலே

வானெங்கும் வானத்தின் பிம்பங்களே.

கடல் முழுவதும் கடலின் அலைகளே.

சன்னமான ஒளி

சன்னமான இருள்.

சன்னமான மௌனம்.


2.

வெறுமனே வானத்தைப் பார்க்கிறேன்

எந்த காட்சியும் புலப்படவில்லை

கட்டற்ற அமைதியில் மிதக்கிறதென் பிரபஞ்சம்.

~

சிறகசைப்போடு

ஒரு சின்னஞ் சிறு பிரபஞ்சம்

காலப் பறவையென.


About the author

இலட்சுமண பிரகாசம்

இலட்சுமண பிரகாசம்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website