cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 13 கவிதைகள்

கண்ணன் கவிதைகள்

கண்ணன்
Written by கண்ணன்

  • சொல்லாப்பிழை

ஆளுயர மரப்பீரோவின் 

அடிப்பகுதி திறந்து பார்க்க 

அனுமதி கிடைத்தபோது 

மேலுதட்டிற்கு மேல் மீசை அரும்பியிருந்தது எனக்கு

 

பழுத்த கடிதமொன்று 

பிரித்துப் பார்க்கையில் பக்கத்தில் அம்மா

முத்தான கையெழுத்தில் 

விட்டுப் பிரிந்தால் சட்டெனப் பிரியும் உயிர் 

எனக் கவிதை விரிய 

எனக்கோ கைகால் நடுக்கம் 

இந்தக் கண்ராவியெல்லாம் மறச்சித்தான் 

அவசரமாகக் கல்யாணம் கட்டினார் ஒங்கப்பன்’ 

சேலையால் வாய்மூடி ஒரு பாட்டம் அழுதாள் அம்மா !

கல்லூரியில் நானெழுதிய

 ‘ராமஜெயத்தைஎங்குதான் வைப்பது?


  • பூப்போட்ட இளஞ்சிவப்பு காலணி அணிந்தவள்

 

கைதொட்டுக் கும்பிட்டு ஆண்கள் அமர

உள்ளறையில் கட்டிக்கொண்டு அழுதபடி பெண்கள் 

கற்குவியலாய் வாசலெங்கும் காலணிகள்

பள்ளிப் பிள்ளைகளாய் குறுகிய சந்தின் இருபுறமும்

நெகிழி  நாற்காலிகள் 

மின்கம்பத்தில் சிட்டுக்குருவிகள்

ஏதுமறியாக் குழந்தைகளாய் ஓடியாட

சம்பந்தி சோறு, கை நனைக்கனும் ஒரு வாயாவது’ 

என்றபடி வந்தவர்களிடம் யாரோ சொல்லிக் கொண்டிருக்க

சாம்பல் சொம்புடன் சாங்கிய அய்யர்

சைக்கிளில் கிணறு நோக்கிச் செல்ல 

சாங்கியம் எழுந்து வாங்கஎன்றதும்

 சூப்பிய பனம்பழமாய் அமர்ந்திருக்கும் 

தந்தையின் கைகள் பற்றி

அம்மாவென அரற்றியபடி நடக்கும்

இருபிள்ளைகளுக்கும் 

கண்முன்னே விரியும் முடிவிலிப் பாதை

ஆயுள் முழுக்க குற்ற உணர்வைப் பரிசாய்க் கையளித்து 

உத்திரத்தில் தொங்கியவளுக்கு 

எத்தனை சுயநலம்  !


இந்தக் கவிதையை Spotify App -இல் கேட்கலாம்


Art Courtesy : 

Feature Image : Painting by Dhananjay Mukherjee.

Podcast Image : Sachin Sagare (aartique.com)

About the author

கண்ணன்

கண்ணன்

சேலம்-தாரமங்கலத்தை சார்ந்த கண்ணன் தற்போது பெங்களூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
இவரின் முதல் கவிதை நவீன விருட்சத்தில் 30வருடத்திற்கு முன்பு வெளிவந்தாக தெரிவிக்கிறார். சமீப காலங்களில் நுட்பம்- கவிதை இணைய இதழிலும், செந்தூரம், புரவி, தளம், நடுகல் போன்ற இதழ்களிலும் இவர் எழுதும் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன.
'கோதமலை குறிப்புகள் ' எனும் தலைப்பில் இவரின் முதல் கவிதைத் தொகுப்பும் வெளியாகி இருக்கிறது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Ms.Sarojini Kanagasabai

அருமை தோழர்

You cannot copy content of this Website