cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 14 கவிதைகள்

புலனாகாத ஒரு வேளை


பொழுதுகள் மேல்
அபார பிரேமையுடையவள்
அவள்.

விடியலின்
முதல் கதிரொளியும்
அந்தியின் காற்றும்
அவ்வளவு பிடிக்கிறது
அவளுக்கு.

அடுப்பிற்கும் வாயிலுக்குமாக
ஓடவைக்கும்
பதட்டமான காலையும் கூட
அவளுக்கு விருப்பம் தான்.

சோர்வூட்டும்
யாருமற்ற மதியத்திலும்
சுழலும் மின்விசிறியில்
அலையின் ஓசையைக் கேட்கிறாள்.

இரண்டாம் ஜாமத்தின்
இருளில் ஒளிரும்
நாயின் கண்கள்
பயத்தைத் தந்தாலும்
தனியே நடப்பதில்
ஆனந்தம் காண்கிறாள்.

எத்தனை முயன்றும்
கைகூடாமற் போனது
என்னவோ
அவளின் மாலைப்பொழுது தான்.


 இந்த கவிதையை Spotify App -லும் கேட்கலாம். 

About the author

முத்து காந்திமதி

முத்து காந்திமதி

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website