cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 16 கவிதைகள்

காலத்தின் மீதான வாஞ்சை 


இயற்கையின் ஆச்சரியங்களை, வினோதங்களைத்

தன்னுள்ளே அடக்கி

பிரபஞ்சத்தின் பெருவெளியில் 

பல யுகத்தினைத் தாங்க வல்ல

காலத்தின் மேல் தனியொரு வாஞ்சை

 

அதீத நம்பிக்கையில் தடுமாறும் கணங்கள்

அனுபவங்களின் கொள்முதலாக

அகத்தேடலின் உயிர் உருகலில்

தொடரும் நெடும் பயணம் 

மானுடத்தின் சாரத்தினைக் கண்டறியத்

தன்முனைப்புடன் தொடர்கிறது 

 

உண்மையைப் போலவே எரியும் பொய்மைகளில்

கருகிப் புகையும் புனைவுகள்

மனதைப் புதைத்து, அறிவிலியாய்

கேள்வியின்றி மௌனத்தில் முக்குளிக்கும் மனிதம் 

இவ்வளவுக்கும் நடுவே…  

உடைந்த கண்ணாடிக்குள் சிரிக்கும் புத்தர்

 

ஏனோ… இன்னும் மிச்சமிருக்கிறது

காலத்தின் மீதான வாஞ்சை


கவிதை வாசித்த குரல் : அன்புச்செல்வி சுப்புராஜூ.

Listen on Spotify : 

About the author

அன்புச்செல்வி சுப்புராஜூ

அன்புச்செல்வி சுப்புராஜூ

தன்முனைக் கவிதை படைப்பாளர்கள் பேரவையின் தலைவராகவும், அன்பின் சங்கமம் சிறுவர் உலகம் அமைப்பின் செயலாளரகவும் உள்ள அன்புச்செல்வி சுப்புராஜூ இதுவரை புதுக்கவிதை, ஹைக்கூ, தன்முனை கவிதைகள், சிறார் கதைகள் வகைமைகளில் பத்தொன்பது நூல்கள் வெளியிட்டு உள்ளார். கம்போடிய அரசு மற்றும் அங்கோர்வாட் தமிழ்ச்சங்கம் இணைந்து வழங்கிய சர்வதேச பாரதியார் விருது, தமிழாழிப் பேரவை கனடா வழங்கிய கலையாழி உள்ளிட்ட சில விருதுகளைப் பெற்றுள்ளார்.

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
Raju Arockiasamy

மனதைப் புதைத்து, அறிவிலியாய்

கேள்வியின்றி மௌனத்தில் முக்குளிக்கும் மனிதம் …

இயல்பான சொற்களில் மனிதம் பேசும் கவிதை…
வாழ்த்துகள் கவிஞரே…

ANBUCHELVI SUBBURAJU

அன்பின் உளங்கனிந்த நன்றி

You cannot copy content of this Website