cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

சொற்களின் ஒப்பனை


நீண்ட வெள்ளைத்தாளென
தொடங்கும் பகல் பொழுதில்
வெயில் என எழுத
வியர்வையில் ஊறும்.
மழைநாட்களில் ஈரப்பதமேறி
மை கசியும்.
வசந்ததின் வரவை
மலர்த்திப் பதியனிடும்.
குளிர்க்காலை உதயத்தில்
வெடவெடக்கும்
இந்த சொற்களுக்குத்தான்
எத்தனை ஒப்பனை


 கவிதை வாசித்த குரல்:  தேன்மொழி அசோக்.

Listen On Spotify : 

About the author

மைதிலி கஸ்தூரிரங்கன்

மைதிலி கஸ்தூரிரங்கன்

அரசுப்பள்ளி ஆசிரியர், புதுக்கோட்டை த.மு.எ.க.ச மாவட்டக் குழு உறுப்பினராக உள்ளார். இவரின் கவிதைப் படைப்புகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி உள்ளது.

Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments

சொற்களைக் கொண்டு கவிதை எழுதித்தான் பார்த்திருக்கிறேன். முதன் முறையாக சொற்களைப் பற்றியே ஒரு கவிதை!! அசத்தல்!

வெங்கடேசன் Sivam

அருமை

You cannot copy content of this Website