cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

பா.ராஜா கவிதைகள்

பா.ராஜா

  • சிவாலயத்து அந்தியின் ஒளி.

கோபுரத்தின் நிழல்
குளத்தில் அசைகிறது.

வெண்கல
மணியோசைக்கு
விரைகின்றன பறவைகள்
மேற்கு நோக்கி.

ஆடுகளை
மேய்த்துத் திரும்பும் ஒருத்தி
குளிக்க ஆயத்தமானதில்
நீரின் அலைவிற்கு
ஒருவனது மனதின் நடு முள்
நடு
நடுங்குகிறது.

உச்சத்து
மின் விளக்குச் சிவப்பில்
சிவ
சிவ.


  • கருவறை.

மெழுகுவர்த்தி
சுடர்வதில் தெரிகிறது
அறையின் மூலையில்
எரிந்தணைந்து
நெளிந்த
ஒரு தீக்குச்சி.

அதைப்போலவே
குறுகிப்படுத்து
உறங்க முயல்கிறேன்.

அவ்வளவுதான்
இடமிருக்கிறது.

மேலும்
அப்படி படுத்திருந்தும்
பழக்கம்.


கவிதைகள் வாசித்த குரல் :   கலை சாய் அருண்

Listen On Spotify : 

About the author

பா.ராஜா

பா.ராஜா

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையில் பிறந்த பா.ராஜா தறித்தொழிலாளியாய்ப் பணிபுரிகிறார். இவரின் எழுத்தாக்கத்தில் அம்மா, முதல் முதலாய், மாயப்பட்சி, நேற்றின் ஜன்னலுக்குப் பார்வையைத் திருப்புதல், நிழற்படத்தில் மறைந்திருக்கும் முதுகு ஆகிய கவிதைத் தொகுப்பு நூல்கள் , கோடை காலத்தின் சாலை எனும் தலைப்பில் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளிவந்துள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website