cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

அகாலம்


அவர்கள் கிசுகிசுக்கிறார்கள்

வெப்பம் திங்கத் தொடங்க
வானத்தில் ஏறிக் கொண்டு
நீல மழையை
அனுப்பி வைக்கிறேன்

அம்மா
தொப்பலாக
நனையத் தொடங்குகிறாள்.

கத்தியை வைத்து
விசத்தை
உறுஞ்சித் துப்பிக் கொண்டிருப்பவனிடம் தான்
அடிக்கடி சண்டை போட்டிருக்கிறேன்

நீல நிறக் கைகளை
முதல் முறையாகப்
பாரக்கிறேன்
கடைத் தெருவிலிருந்து
வந்த அம்மா
மேலே விழுந்து அழுகிறாள்

பானிப்பூரி கடைக்கு போகலாம்
என்று
தோழியிடம் சொன்னது
மங்கலாக நினைவிருக்கிறது
அது ஒரு அற்பத்தின் அல்லது நீங்கள் நினைப்பது போல
பசியின் விளையாட்டு

உச்சுக் கொட்டும்
தொண்டைகளில்
நாகமாணிக்கம் உருள்கிறது

விசத்தின் அன்பு
இன்ன பிறவான அனைத்தும்
அல்லது
கடலில் ஒரு நாகம் அதுவே
நிலத்தில் மாணிக்கம் கக்குகிறது
தேடாதே
என்னுடல் உன் ஆதி ஞாபகம்

இப்படித்தான்
தீண்டுவதும் தீண்டதகாததும் ஆன காலத்தில்
பல்லாயிரம் இரவுகள்
முடிந்து போயிருக்கக் கூடும்.


கவிதைகள் வாசித்த குரல் :  தேன்மொழி அசோக்

Listen On Spotify : 

About the author

அம்பிகா குமரன்

அம்பிகா குமரன்

திருப்பூரைச் சார்ந்த அம்பிகா குமரன் சமகாலத்தில் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்களில் ஒருவராக திகழ்கிறார், மரபுக்கவிதைகளிலும் நவீனக் கவிதைகளிலும் சிறப்பான படைப்பாக்கத் திறன் பெற்றவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் பல பொறுப்புகளை கவனித்த இவர், தற்போது திரைப்பட பாடலாசிரியராகவும், திரைப்பட துணை இயக்குநராகவும் பணிபுரிகிறார். “காலம்” உள்ளிட்ட கவிதைத் தொகுப்பு நூல்கள் இவரின் படைப்பாக்கத்தில் வெளிவந்துள்ளன. வேரல் புக்ஸ் எனும் பதிப்பகத்தை நிறுவி, கவனத்திற்குரிய பல நூல்களை பதிப்பித்தும் வருகிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website