cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 17 கவிதைகள்

இரண்டாம் பதின்மம்


நான்காம் நாளின்
மதிய உணவிற்குப்பின் துவங்கும்
இரண்டாம் இன்னிங்ஸ்களைப்போல
உடல் தளர்ந்த நாற்பதுகளில்
பசை பிடிக்கின்றன ஆசைகள்

எல்லைக்கோடுகளைத் தாண்டும்
அகப்பூச்சின் பேரார்வத்தினை
சில நேரங்களில் மறைக்கமுடியாமல்
காட்டிக் கொடுத்துவிடுகிறது முகம்

ஆர்வத்தின் மிகையுணர்வில்
அகலப்பந்துகளைத் தொட்டுவிட்டு
நாக்கைக் கடித்துக்கொள்ளும்
குற்றவுணர்வின் மிடுக்குத்தனம்

இனியொரு வாய்ப்பில்லையெனும்
அசரீரிகளை மொழியும்
வானொலிப்பெட்டியின் ஒலிமுடுக்கிகளை
யாரோ திருகிக் கொண்டேயிருக்கிறார்கள்

பூஞ்சைகள் பச்சையத்திற்கு ஏங்கும்
ஏக காலத்தின் மறுமுனையில்தான்
சில ஆல்காக்கள் பூஞ்சைகளாகவே
உயிரைச் சுமந்திருக்கின்றன.


கவிதைகள் வாசித்த குரல்: கீதாஞ்சலி மஞ்சன்

Listen On Spotify : 

About the author

யாழிசை மணிவண்ணன்

யாழிசை மணிவண்ணன்

இயற்பெயர் மணிவண்ணன். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த பிள்ளைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர். கவிதைகள் மற்றும் நூல் விமர்சனங்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். பணி நிமித்தம் தற்பொழுது சிங்கப்பூரில் வசிக்கிறார். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்பு நூல்கள் வெளியாகி உள்ளது .

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website