cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 18 கவிதைகள்

ஒரு ரயில் பாடல்


பார்வையற்ற
ஒருவரின்
பாடல் ஏந்தி
பயணிக்கிறது ரயில்.

ஒளி கைவிட்ட
அவர் உலகை
சுவீகரித்து
கொண்டது
மெல்லிசை.

தன்
அரூப விரல் கொண்டு
அது திறக்க முயல்கிறது
இதயத்தின் அறைகளை

புலன் ஒன்று மரித்தவர்
இப்போது
உயிர்தெழுகிறார்
வெவ்வேறு செவிகளில்.

குறையொன்றுமில்லை.


 

About the author

இரா. சுகன்யா

இரா. சுகன்யா

சென்னையைச் சார்ந்த இரா.சுகன்யாவின் கவிதைகள் வளரி கவிதை இதழில் வெளியாகி உள்ளன. சமூக ஊடகமான ஃபேஸ்புக்கில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருவதாக தெரிவிக்கும் இவர் இலக்கிய நூல்கள் வாசிப்பிலும் நாட்டமுள்ளவர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website