cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 19 கவிதைகள்

நினைவலைகள்


நான்
நானாகிய பொழுதுகளில்
இறந்தகாலத்தை
சிலாகித்துக் கொண்டிருந்தேன்…

இது
நிகழ்காலம் என்ற
நினைவுகளை மறுத்தது
நினைவெல்லாம்
இறந்தகாலத்தை
உயிர்ப்பித்து
நினைவறைக்குள்
அமர்த்திக்கொண்டிருந்தது…

கண்ணிலிருந்து
கன்னம் உதட்டுவழி
வெகுதூரமில்லை
கண்ணீர்த் திவலைகள்
தேம்பி விழுவதற்குள்
கைவிரல்கள் பரிவோடு
தடுத்து நிறுத்தின…

நிகழ்காலத்தில்
நிலைகுத்தி நின்றன
கண்கள்
நினைவு திரும்பிய
குழந்தை மனம்போல்
சுழன்று சுதாரித்த மனம்
பெருமூச்சோடு
எதிர்காலம் பற்றிய
எண்ணங்களை
சேகரிக்க மெதுவாய்
நடக்க ஆரம்பித்திருந்தது
அன்பின் கரங்களைப்பற்றியபடி!


கவிதைகள் வாசித்த குரல்:
  ஏரா மகள். ஜீ. சுமித்ரா
Listen On Spotify :

About the author

ஏரா மகள். ஜீ சுமித்ரா

ஏரா மகள். ஜீ சுமித்ரா

இலங்கை நாட்டிலுள்ள திருக்கோணமலையில் பிறந்து வளர்ந்த சுமித்ரா போர்ச்சூழலால் புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் தற்போது வசித்து வருகிறார். தமிழ்மீது கொண்ட பற்றினால் தஞ்சாவூர் இணையப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிப் பட்டயக்கல்வியைத் பயின்ற இவர் பிரான்ஸில் புலம்பெயர் தமிழ்க் குழந்தைகளுக்கான தமிழ்ப் பாடசாலையில் தமிழ்மொழி ஆசிரியராக பதின்மூன்று ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறார். முகநூலிலும் இணைய இதழ்களிலும் கவிதைகள் எழுதி வரும் இவர்; மொழிபெயர்ப்புக் கவிதைகள் மீது அதிக ரசனையும், அதன் பிறிதுபட்ட மொழிநடையும் பிடிக்கும் என்றும், இசையைவிட இலக்கியங்கள் மீது அதிக ரசனை என்றும் தெரிவிக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website