cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 20 கவிதைகள்

அகோந்திரத்தின் நெடி


அறுத்தெறியப்பட்ட
குறும்பாட்டின் குளம்படிகளில்
தெறித்துச் சிதறும்
குருதித் திவலைகள்

சாம்பிராணிப் புகையும்
பத்தியின் வாடையும்
கமகமக்கும் அத்திக்கு
முன்வேலையில்….

கம்பீர புஜம் கட்டிக்
களரிக்கு வரும் சூரவேசக்காரனைப் போல்
தேரின் வடக்கயிறுகள்
அசைய ஆரம்பித்தன!

தேர்பலி கொடுக்க
தரதரவென இழுத்து வரப் பட்ட
வெள்ளாட்டின் கழுத்து
நரம்பு முறிந்து போவதாய்
எண்ணிக் கொண்ட
மதுரை வீரனின் மனம்
கண்ணீர் வடிக்க
ஆரம்பித்தது…

நெடிய கொடுவாளை ஏந்திக்கொண்ட பூசாரி
ஆட்டின் பிடரியில்
மஞ்சள் தண்ணீர்
தெளித்துச் சிதறிய
சிதறலில் நிரம்பி
வழியும்
அகோந்திரத்தின் வாசனை….


கவிதைகள் வாசித்த குரல்:
கலை.சாய் அருண்
Listen On Spotify :

About the author

நடுநாட்டுத் தமிழன்

நடுநாட்டுத் தமிழன்

‘நடுநாட்டுத்தமிழன்' எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதும் இவரின் இயற்பெயர் இளங்கவி ச வாசுதேவன். முதுகலைத்தமிழ்ப் பட்டதாரி; தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர், பேச்சாளர், கவிஞர். முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பரிசும் விருதும் பெற்றவர். மழைக்காலப்பூக்கள், மரபுவெளி, நிணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தெருக்கூத்துக் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்.தொடர்ந்து பண்பாட்டு கலை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ள தமிழ்ப் பற்றாளர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website