cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 21 கவிதைகள்

தினுஷா மகாலிங்கம் கவிதை


1

நாளை என் விடியலில்
நீ இருக்க மாட்டாய்…

சலனப்பட்டது போதும் என்று
இரவை மூடிவைக்க நினைக்கிறேன் .

எப்படியும் விடியும் …..
உன் வாழ்வின்மீது படிந்துவிட்ட
என்னை அழுத்தமாகத் துடைத்தெறியும்
உன் பிரயத்தனங்களில்
நானும் பங்குகொள்ளப் போகிறேன் .

அடிக்கடி கதவு தட்டும் உன்
புலனகதவுகள் இனி
சாத்தியே இருக்கட்டும்.

நல்லவேளையாகக் காதலைத் தவிர
நமக்குள் எதையும் பரிசளித்துக்கொள்ளவில்லை.
அதுவரை அமைதிகொள்..

போகட்டும்….

உனக்கு நான் ஒரு கிளையாக மட்டும்தான்
இருந்திருக்கிறேன்
எனும்போதுதான் அச்சமாக இருக்கிறது
சிறகாக அல்லவா இருந்திருக்க வேண்டும் .


2

வாசல் வரை  வந்து நனைத்துவிட்டு போகும் மழையை போலத்தான்
நிபந்தனையற்று அன்பு செய்யும்
என்னை காத்திருக்க சொல்கிறீர்கள்

யாரும் கைபிடித்து உள்ளே அழைப்பதில்லை
கைகளில் ஏந்திக்கொள்வதுமில்லை.

நான்  என் துக்கத்தின் ஒரு பிடியினை
அங்கேயே வைத்து விட்டு வெளியேறுகிறேன்….


 

About the author

தினுஷா மகாலிங்கம்.

தினுஷா மகாலிங்கம்.

இலங்கையைச் சார்ந்தவர். ஆவநாழி, கதிர்ஸ், ஆதிரை தமிழ் நெஞ்சம் இதழ் மற்றும் இலங்கையின் காற்புள்ளி சஞ்சிகை உள்ளிட்ட இதழ்களில் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளது.

Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
Vanitharuban

அருமை

You cannot copy content of this Website