1
நாளை என் விடியலில்
நீ இருக்க மாட்டாய்…
சலனப்பட்டது போதும் என்று
இரவை மூடிவைக்க நினைக்கிறேன் .
எப்படியும் விடியும் …..
உன் வாழ்வின்மீது படிந்துவிட்ட
என்னை அழுத்தமாகத் துடைத்தெறியும்
உன் பிரயத்தனங்களில்
நானும் பங்குகொள்ளப் போகிறேன் .
அடிக்கடி கதவு தட்டும் உன்
புலனகதவுகள் இனி
சாத்தியே இருக்கட்டும்.
நல்லவேளையாகக் காதலைத் தவிர
நமக்குள் எதையும் பரிசளித்துக்கொள்ளவில்லை.
அதுவரை அமைதிகொள்..
போகட்டும்….
உனக்கு நான் ஒரு கிளையாக மட்டும்தான்
இருந்திருக்கிறேன்
எனும்போதுதான் அச்சமாக இருக்கிறது
சிறகாக அல்லவா இருந்திருக்க வேண்டும் .
2
வாசல் வரை வந்து நனைத்துவிட்டு போகும் மழையை போலத்தான்
நிபந்தனையற்று அன்பு செய்யும்
என்னை காத்திருக்க சொல்கிறீர்கள்
யாரும் கைபிடித்து உள்ளே அழைப்பதில்லை
கைகளில் ஏந்திக்கொள்வதுமில்லை.
நான் என் துக்கத்தின் ஒரு பிடியினை
அங்கேயே வைத்து விட்டு வெளியேறுகிறேன்….
அருமை