cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 2 கவிதைகள்

மேலும் இரண்டு…

அதீதன்
Written by அதீதன்

முழுநிலவு நாளில்

ஜொலித்திட்ட அம்புலியைக் காட்டி

அது என்னவென்று  கேட்டவனிடம்

தந்தை தனக்களித்த விளையாட்டுப் பொருள்

எனப் பதில் தந்தது

கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த குழந்தை

இன்னும் பேச்சினை வளர்க்க வேண்டி

அவ்வளவு உயரத்தில் இருப்பதன்

காரணம் வினவிட

தான்தான் அங்கே வைத்ததாய்க் கூறி

பிஞ்சு விரல் நீட்டிக் குதூகலித்தது

சக குழந்தையொன்று

அதனைப் பிடுங்கிக்கொள்ளும் அபாயமிருப்பதால்தான்

எட்டாத் தொலைவில் வைத்திருக்கும் காரணத்தைக்

காதுக்குள் இரகசியமாய்ச் சொன்னது

தினம் தினம் தேய்ந்து

முழுதாய்க் காணாமல் போனதொரு  நாளில்

மனம் பதைபதைக்க

வேகமாய் ஓடிச் சென்று

விண்ணில் பதுக்கப் பட்டிருந்த நிலவு

தொலைந்து போன செய்தியைச் சொன்னதும்

பின்னே மறைத்திருக்கும் கைகளை

மெல்ல முன் கொண்டுவந்து

விரித்துக் காட்டி

விளையாட வேண்டி

நேற்றே பத்திரமாய் எடுத்துவைத்திருப்பது தெரியாமல்

ஏமாந்து வந்திருப்பவனைக் கேலிசெய்து

கைகொட்டிச் சிரித்த

மழலையின் கண்களுக்குள்

மேலும் இரண்டு பௌர்ணமிகள்.

About the author

அதீதன்

அதீதன்

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website