cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 25 கவிதைகள்

ரேவா கவிதைகள்

ரேவா
Written by ரேவா

1.தீராப் பயணம்

பறிகொடுத்த மலைக்கு
ஈடாக
எடுத்துக்கொள் என்கிறது
புறவழி

புறப்படும் வரை அறிந்திருக்கவில்லை
அடையும் இலக்கில் எங்கிருக்கிறது
அன்பின் உச்சி


2. பாதை மடிப்பு

எதிலிருந்து தொடங்கியதென்று அறியாத
முடிச்சோடு
அவிழ்கிறது அப் புறவாசல் கணக்கு
பண்பவிழா சூத்திரத்தோடு

கொள்ளப்பட்டன அர்த்தங்கள்
கொடுக்கப்பட்டன நிர்மாணங்கள்
இது என் வாசல்
நான் அறியா வழிக்குள்
கொல்லப்பட்டன அர்த்தங்கள்
கொடுக்கப்பட்டன நிர்மால்யம்

ஊற்றுக்கண் உடன் வர
உடைந்திடும் கண்ணீர்
உதிர்த்திடும் கொடிமுல்லையில் பூக்கிறது
சரம் சரமாய் நயவஞ்சகம்

அது நிழலுக்கு விரிக்கும் வாசனையாகி
உடன் வருகிறது
உடன் வரா பாதைகளோடு


3. வரிக்குள் விரியும் அலை

முத்தக் கோட்டைத் தாண்டும் முன்னே
முடிந்துவிட்ட விளையாட்டில்
களைத்திருப்பாய்

கிறுக்கிய வரியில்
இறங்குவதாய் மாயும் எண்ணம்
மடித்து தந்த உன்னை
எத்தனை அடுக்கில் சேமிக்க

மனம் மேடு
கரை மீள
பார்
பற்றுகிறது உன் அலை

தெரியாது தானே
அலைக்கு காது தர

கழன்றுவிட்ட முத்துக்களை முதலில் சேமி
செப்பனிட துணியும் போது
அணிந்துகொள்ள காரணமுண்டு

கடல் கோட்டின்
மேலுதடு
கரை மேட்டின்
கீழுதட்டை தழுவிக்கொள்ளும் போது

மீண்டும் பிறப்போம்


Art : joseartgallery.com

கவிதைகள் வாசித்த குரல்:
 ரேவா
Listen On Spotify :

About the author

ரேவா

ரேவா

மதுரை மாநகரைச் சார்ந்த ரேவா; தற்போது பணியின் நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். இவர் எழுதிய கவிதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. ‘கவனிக்க மறந்த சொல்’ மற்றும் ‘அலை விளையாட்டு’ ஆகியவை இவரின் எழுத்தாக்கதில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்களாகும். Nutpam - Online Poetry Radio - வில் ஆர்.ஜே- வாக கவிதை நிகழ்ச்சியை தொகுத்தும் வாசித்தும் வழங்கிக்கொண்டிருக்கிறார்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website