cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 31 கவிதைகள்

ச.ப்ரியா கவிதைகள்


உன் நினைவுகளை
தைலமென தடவியவாறே
உறங்கிபழகிவிட்டேன்
நீ முற்றிலும் விலகிவிட்ட பிறகும்
வெற்று குப்பியின் அரூபவாசனை
போதுமானது இரவுகளுக்கு

நிலைக்கண்ணாடி முன்
நின்று கொண்டு
அவனை அவனே சுயமி எடுத்து கொள்கிறான்

கண்ணாடியை வாஞ்சையுடன் முத்தமிடும்
குழந்தையின் அழகு
அக்காட்சிக்கு

விழி இரண்டிலும் அஞ்சனம் தீட்டி
இமை ஓரம்
இரண்டு வால் வரைகிறாள் மகள்

நிலை கண்ணாடி நீருக்குள்
நீந்துகின்றன இரண்டு மச்சங்கள்

பால் வற்றிய முலைக்காம்பை
பருகும் சிசுவாய்

காய்ந்து சுணங்கிய மலர்களில்
தேன் தேடும் பூச்சியாய்

குழாயின் கடைசி சொட்டு நீரும்
தீர்ந்து விட்டபிறகு
அலகு உறிஞ்சும் காகமாய்

அதிகாலை விடியலில்
ஒளியிழந்து நிற்கும்
வெண் அச்சு நிலவாய்

தீர்ந்துவிட்ட காதலில்
சிநேகம் வேண்டி நிற்கிறாய்


கவிதைகள் வாசித்த குரல்:
ச.ப்ரியா
Listen On Spotify :

About the author

ச.ப்ரியா

ச.ப்ரியா

தமிழ்நாட்டிலுள்ள ஆனைமலையை சார்ந்த ச.ப்ரியா ‘ஓவியங்கள் வழியும் தூரிகை’ கவிதைத் தொகுப்பு மூலம் பரவலாக அறியப்பட்டவர். பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவர்களுக்கான உரிமைகளை மீட்பதற்கான போராட்டங்களை முன்னெடுத்தல் போன்ற பங்களிப்புகளை செய்து வருகிறார். மலையாளத் திரைப்படங்களின் தமிழில் மொழிபெயர்ப்பவராகவும் உள்ள இவர்; விளம்பர படங்களுக்கு பாடலாசிரியராகவும் பணிபுரிகிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொள்ளாச்சி கிளை துணைத் தலைவராக உள்ளார். ப்ரியா சந்திரன் எனும் இவரது யூ-டியூப் சேனல் மூலமாக பல கவிஞர்களின் கவிதைகளை வெகுஜன மக்களுக்கு கொண்டுச் செல்லும் பணியையும் செய்து வருகிறார். இவரின் சமீபத்திய “அனலிக்கா” கவிதைத் தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website