cropped-logo-150x150-copy.png
0%
Editor's Choice இதழ் 3 கவிதைகள்

அவள்

மதுரா
Written by மதுரா

சுயந்தொலைத்து
சுகமாய் வாழ
சிருஷ்டி செய்யப்பட்ட
சொர்க்கத்தின்
வாசலில்
காவலிருக்கின்றன
செந்நாய்கள்.

இறக்கைகளைப்
பிய்த்தபின்
இருக்குமிடத்திலேயே
பறக்கப் பழகப்
பயிற்சி எடுக்கின்றன
பச்சைக் கிளிகள்.

விழிகளை மூடியபடி
இருண்ட பூலோகத்தை
இரவென்றும்
பகலென்றும்
பகுத்துக் கொள்கின்றன
ருத்திராட்சப் பூனைகள்.

அகமழித்து
ஆதியின் சுடரேந்தி
இருள் கிழிக்கும்
பிரபஞ்சப் பேரொளியாய்
ஒருத்தி
என்றேனும்
உதிக்கக்கூடும்.

About the author

மதுரா

மதுரா

ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டதாரியுமான எழுத்தாளர் மதுரா என்கிற தேன்மொழி ராஜகோபால் மன்னார்குடியைச் சார்ந்தவர். கவிஞர், கதையாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கியத்தின் பல தளங்களிலும் இயங்கி வருபவர் ! நவீனத்துவக் கவிதைகளையும், மரபுக்கவிதைகளையும் எழுதுவதில் திறன் வாய்ந்தவராகவும் உள்ளார். இவரின் “சொல் எனும் வெண் புறா” , “பெண் பறவைகளின் மரம்” உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website