cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 39 கவிதைகள்

ரேவா கவிதைகள்


  • குரல் பாதை

நினைத்துக்கொள்ளும் தருணங்களிலிருந்து
தப்புகிற வலிக்கு
நுழைத்துக் கொண்ட மலையின்
வழி
களைத்து வருகிறது
ஒரு பெரும் குரல்

எதிரொலி
எதிர்பட
சுமக்கும்
காற்றுக்குள்
தட்டுப்படுகிறது

உன் அசைவுக்கு
இசையா மௌனம்


  • மரி

மூளை மடிப்பின் முனை மடங்க
பழுப்பேறியிருக்கிறது
உன் பாத்திரம்
யாசகா
ஒரு மந்திரமென
என்னை உச்சரி

வரம் தர
வளர்க்கிற
காளியின் உரு
என் பிச்சை

பொருள் சேர் பிறப்பில்
நழுவும் துளிக்குள்
வதம் செய்ய
இடுகிறேன்

ஒரு சொல்லை


கவிதைகள் வாசித்த குரல்:
ரேவா
Listen On Spotify :

About the author

ரேவா

ரேவா

மதுரை மாநகரைச் சார்ந்த ரேவா; தற்போது பணியின் நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். இவர் எழுதிய கவிதைகள் அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியாகி இருக்கின்றன. ‘கவனிக்க மறந்த சொல்’ மற்றும் ‘அலை விளையாட்டு’ ஆகியவை இவரின் எழுத்தாக்கதில் வெளியான கவிதைத் தொகுப்பு நூல்களாகும்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website