cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 4 கவிதைகள்

தேவிலிங்கம் கவிதைகள்


னமேகங்கள் ஓய்ந்துறங்கும் இரவுகளில்
மினுக்கி நட்சத்திரங்களாய்,
எட்டிப்பார்க்கின்றன இறந்த கால இரணங்கள்
பிறரறியா துயரமதை ,
உலர்த்திப்போன காற்றறியும்,
கன்னங்களின் உப்புவழிதடம்..
மறக்கவியலாமல் கூடிக்கொண்டே
போகிறது அவமானங்களின்
எண்ணிக்கை..
அடுத்தவேளை உணவின் முன்பு
கையேந்தும் காலம் பற்றி எரிகிறது
எரிதழல் உருக்கும் நிறை நிணமென.

 

செம்மண் நிலம் விழும் வெண்ணிறகு,
பனிபடரும் பால் பருவச் சிகரம்..
புகை நடன நளின திண்ணசைவு,
நகில் போர்த்திய மென் துகில்,
ஈடில்லை
கடக்கும் குழந்தை கை ஸ்பரிசம்.


 

About the author

தேவிலிங்கம்

தேவிலிங்கம்

வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.

பல்வேறு அச்சு / இணைய இதழ்களில் இவர் எழுதும் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. ’நெய்தல்நறுவீ’’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘கிளிச்சிறை’ எனும் சிறுகதைத் தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website