cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 7 கவிதைகள்

ச்ஜேஸூ கவிதைகள்


அமாவாசை சூரியனில்
முருங்கை மர காகத்தின்
உண்ணாவிரதம்
மகனுக்கு உணர்த்தியது
இறந்த காலத்தில்
மருமகளின் பாராமுகத்தை!

என் வீட்டு
புளிய மரமும்
போதி மரமானது
நான் புத்தனானதால்!


 

About the author

ச்ஜேஸூ ஞானராஜ்

ச்ஜேஸூ ஞானராஜ்

ச்ஜேஸூ ஞானராஜ். இவர் ஜெர்மனியில் கணினித் துறையில் பணிபுரிகிறார். இளவயது முதலே கதை, கவிதை, கட்டுரைகள் எழுதிவருகிறார். கல்லூரியில் படிக்கும் போதே பல கவிதைகள் எழுதி பரிசுகள் வாங்கியுள்ளார். இவரின் பல சிறுகதைகள் விகடன் இணையத் தளத்தில் வெளிவந்துள்ளது. "ஜெர்மனியை சுற்றிபார்க்கலாம் வாங்க" என்ற இவரின் ஐந்து வார தொடர், தினமலர் இணையத் தளத்தில் வெளியானது. ஜெர்மனியில் தொழில் புரியும் வளர்ந்து வரும் தமிழ் தொழிலதிபர்களை பேட்டி கண்டு விகடனில் எழுதியுள்ளார். இவரின் 'ஈட்டி குத்திய பேராசை' என்ற சிறுகதை, பிரபல எழுத்தாளர் ஆர்னிகா நாசர் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்றாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website