cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 19 கவிதைகள்

தனிமை


நினைவின் அலைக்கழிப்பில்
அங்கும் இங்குமாய் நடந்து போன நாட்களை நெம்புகோலால் கிளறி
வெறிச்சோடி கிடக்கும் இந்நொடிப் பொழுதில்
மறுபடியும் கட்டவிழ்கிறது குரூரமான ஓர் அகதியின் தனிமை….
வேர்களை வளரவிட்டு
கூர் முனைக் குத்தூசியால் தோலுரித்து
நிர்வாணமாக்கப் பட்ட மரத்தின்
ரணத்தை இப்போது நுகர்கிறது
நெஞ்சு…
எடுப்பிலேயே எக்காளமிடும்
ஆலாபனை கூட
அறிவுரைகளாகிப் போனது..
புரிதலற்றவனின்
அன்பும்
புரிந்து கொண்டவரின்
அவதானிப்பும்
இம்சிக்கும் பொழுதுகளில்
பிரசவிக்கிறேன்
நீயும் நானும் ஓரே ஆடையை உடுத்திக் கொண்ட
அத்தனிமையின் தகிப்பை ….!


About the author

நடுநாட்டுத் தமிழன்

நடுநாட்டுத் தமிழன்

‘நடுநாட்டுத்தமிழன்' எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதும் இவரின் இயற்பெயர் இளங்கவி ச வாசுதேவன். முதுகலைத்தமிழ்ப் பட்டதாரி; தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர், பேச்சாளர், கவிஞர். முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் பரிசும் விருதும் பெற்றவர். மழைக்காலப்பூக்கள், மரபுவெளி, நிணம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தெருக்கூத்துக் கலைக்குடும்பத்தைச் சேர்ந்தவர்.தொடர்ந்து பண்பாட்டு கலை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ள தமிழ்ப் பற்றாளர்.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website