cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 19 கவிதைகள்

தேவிலிங்கம் கவிதைகள்


காத்திர மதியமொன்றின்
உணவுக்கு செல்ல முடியா உழைப்பாளியின்
எடுப்புணவில்
ஒரு கூட்டு
ஒரு வருவலோடு சிறிது இனிப்பும்…
பசியில் கண்ணில் தீப்பறக்க அவதியாய்
பருக்கை அள்ளியவனின்
வெக்கை தாளாமல் வேர்த்தொழுகும் நீர்ப் பட்டு
எரிகிறது நேற்றிறவின்நகக்கீறல்..
உரப்பை உண்ணுக்கொண்டிருந்தவன்
சடாரென மனைவி அனுப்பியஇனிப்பை எடுத்துக்கடித்தான்
மலர்ந்த அந்த புன்னகைக்கு பின்னே இருப்பது
நேற்றிரவில் மிஞ்சிய சொச்சம் தான்…

ரந்து நிற்பவரின் முகம் பாராமல்
உரையாடலை நிகழ்த்தும் தோரணை ஒன்று உண்டு..
முனை முறியாமல் கூர் மழுங்கவைக்கும் தந்திரம் அது..
விடிந்தால் பெண்ணின் நிச்சயம் என
பணம் கேட்டு வந்தவனை
வியாபாரத்தின் துயரங்கள் சொல்லி பொய்யாய் புலம்பும் அது..
கையேந்தி நிற்பவனின் கழுத்தை பிடித்துக்கொண்டு
கருணையைப் பற்றி வகுப்பெடுக்கும் தருணம் அது..
மழைக்கு நனைந்த பறவைக்குஞ்சென சிலிர்த்து
சிறகடிக்க முடியாமல்
பரிதாபப்பார்வை ஒன்றை வீசியவாறே
இயலாமையின் உச்சத்தில்
வலுக்கட்டாயப்புன்னகை ஒன்றை சிந்தும் தருணம் ஒன்று உள்ளது..
அதைக்கடக்காத பெண்ணைப் பெற்றவன் எவனுமில்லை..

ட்டத்திற்குள் வரையப்படும் சதுரமென பட்டும் படாமல்
உறவினர் பழகுதல் கலை..
ஓங்கியடிக்கும் சுத்தியலின் குறி
கைகளுக்கு தவறுதலாய் தரப்படுவது அல்ல..
குறியே ஆணிக்கு அல்ல
உங்களுக்கு என்ற உண்மையை
நீங்கள் மறந்து விடவேண்டும்
தலைகளில் அரைக்கப்படும் மிளகாயின் நிறம்
பச்சை என கூறினால்..
ஆம் பச்சை எனக்கூறி நகர்தல் நலம்
இல்லையேல் அதன் நிறம் விழிகளில் தடவிப் பரிசோதிக்கப்படும்..
பாம்பின் மாமிசம் திங்கும் ஊரில்
நடுக்கண்டம் எனக்கு என
சொல்லத்தெரியாவிடில் அங்கு பிழைத்திருக்க நினைப்பது நமது பிழை..
சோற்றைப் போட்டு அதில் கொஞ்சம் உமிழ்ந்தும் வைப்பார்கள் …
உண்மை எதுவெனில் உண்ணாமல் இருக்க முடியாது.
உப்பை வேண்டுமானால் குறைத்துக் திங்கலாம்..
இறுதியாய் அடிபட்டுக்கதறி அழும் உங்கள் சுயத்திடம் தலை தடவிக் கூறிக்கொள்ளலாம்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.


கவிதைகள் வாசித்த குரல்:
தேவிலிங்கம்
Listen On Spotify :

About the author

தேவிலிங்கம்

தேவிலிங்கம்

வேதாரண்யத்தைச் சேர்ந்த தேவிலிங்கத்தின் இயற்பெயர் விஜிதேவி இராமலிங்கம், இளங்கலை உயிர்ம வேதியியலில் பட்டம் பெற்றவர்.

பல்வேறு அச்சு / இணைய இதழ்களில் இவர் எழுதும் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் வெளியாகி இருக்கிறது. ’நெய்தல்நறுவீ’’ எனும் இவரின் கவிதைத் தொகுப்பை கலக்கல் ட்ரீம்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

‘கிளிச்சிறை’ எனும் சிறுகதைத் தொகுப்பை வாசகசாலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website