cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 22 கவிதைகள்

சிறிய அன்பு

மிருணா
Written by மிருணா

மழை வந்திருக்கிறது
துணி மடித்து முடிக்க வேண்டும்
மழை வந்திருக்கிறது
வீடு கூட்டிக் கொண்டிருக்கிறேன்
மழை வந்திருக்கிறது
களைப்பாக இருக்கிறது
மழை வந்திருக்கிறது
உள்ளுக்கும் வெளிக்கும் தூரம்
வெறும் பத்தடிகள் தானா…
மழை போய்விடக் கூடும்
எந்த நேரமும் …
வேண்டுவதெல்லாம் ஒரு முனைப்பு
ஓடிச் செல்லும் கால்கள்
என்றாலும் பேசாமலிருக்கிறேன்

ஆம் மழை போகட்டும்
தெருவெல்லாம் நடந்து முடிந்து
மீண்டும் ஒரு முறை திரும்பி வந்து
வந்தேன் வந்தேன் என
ஈரக் கால்களால் மண்ணெங்கும் தடமிட்டுப் போகட்டும்
இலைச் சொட்டுகளில் தெறிக்கிற இசையில்
தொந்தரவூட்டும் இதயத் துடிப்பைப் பதித்துப் போகட்டும்
மடக்கப்படும் குடைகளில் தெறிக்கிற திவலையாய்
மழை முடிந்த நிசப்தத்தின் குளிர்ந்த தொடுகையாய்
மரப்பட்டைகளின் அடர்ந்த ஈர வாசனையாய்
பாதமெங்கும் ஒட்டிக் கொள்ளும் செம்மண் வண்ணமாய்
அழிக் கம்பிகளின் பனிக்கட்டிச் சுவையாய்
கசிந்து பரவும் மழையின் ரகசியக் கடிதம்
இன்றின் கனம் சுமக்க அந்தச் சிறிய அன்பே போதும்.


கவிதைகள் வாசித்த குரல்:
மிருணா
Listen On Spotify :

About the author

மிருணா

மிருணா

முதுகலை ஆங்கிலம் மற்றும் ஒப்பியல் இலக்கியம் படித்தவர் மிருணா. வாசிப்பிலும், எழுத்திலும் ஆர்வம் உள்ள இவரது எழுத்துக்கள் ஆய்விதழ்களிலும், சிறு பத்திரிக்கைகளிலும் வெளியாகி உள்ளன.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website