cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 27 கவிதைகள்

தி.கலையரசியின் கஸல் கவிதைகள்


காதல்

ஓர் அதிசய தீபகற்பம்

ஒருபுறத்தில் நீ

முப்புறத்தில் கண்ணீர்!

***

நீ மதுவா ?

இல்லை

மதுவின் தாகமா ?

***

காதல்

எனக்கு இமையாக இருக்கிறது

மரணத்தின் போதும்

அஃது என்னை அணைத்துக் கொள்ளும்.

***

உலகம் ஒரு சிறை

அதிலிருந்து விடுபடுவதற்கு

காதலை

விலங்கிட்டுக் கொள்கிறேன்.

***

நீ எரிக்கிறாய்

நான் எரிகிறேன்

விளக்கில் விழும்

விட்டிலின் விதி என் காதல்.


About the author

தி.கலையரசி

தி.கலையரசி

சென்னையில் வசிக்கும் தி.கலையரசி பல் மருத்துவராக உள்ளார் .இதுவரை ‘நான் உன்னுடைய துறவி’ , ‘உன் பொய்களில் உண்மையாகிறேன்’( கஸல் வகைமை ), ‘நீ காதல் நான் கஸல்’( கஸல் வகைமை என மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டு இருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம் போன்ற இதழ்களில் இவரின் கவிதைகள் வெளியாகி இருக்கின்றன. " தமிழில் கஸல் எழுதும் முதல் பெண் கவிஞர் " என ‘குமுதம் சிநேகிதி’ இதழ் இவரை அடையாளப் படுத்தியிருக்கிறது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website