cropped-logo-150x150-copy.png
0%
இதழ் 33 கவிதைகள்

துணங்கை ~ அத்தர்


துணங்கை

பலிபீடத்தின் மீது நின்று
என் கீதங்களில்
ஒவ்வொரு எழுத்தாய் விம்மி கொண்டிருக்கிறது மாயை
இதழ் பொருத்தா முத்தங்கள்
இன்னும் இதழுக்குள்
நாம் அந்திகளில் பிறப்பெடுத்தவர்கள்
உலகம் இருளும் தருணம்
நம்மை காதல் விலா எழும்பிலிருந்து
உதறித் தள்ளிய போது
ஆழ்கடலின் வெப்பத்திலிருந்து
ஒரு சொல் கொடுத்தாய்
அதில் கிளிப் மாட்டியபடி அவதானித்திருந்தது காமம்
தூரத்து வினைமாண் விளக்குகளுக்கு
எங்கிருந்தும் காம நீர் சுரக்கும்
நம் சுரப்பிகள் காம தேவனின்
உதட்டிலிருந்து சுரப்பவை
மதன நீர் வெளியேறி
பித்தம் தலைக்கேறி உடலை அவிழ்த்து
பட்டற செய்திருக்கிறோம்
துணங்கை ஆடி ஆடி
வெளியேறுகிறது புணர் வாசம்
அரம்புலிகள் கொண்டு மூடிக்கொண்டோம்
அரம்புலிகள் கொண்டு மூடிக்கொண்டோம்


அத்தர்

சாயமற்ற காலங்களை இனி லாவண்டர் பூக்களால் அலங்கரித்து கொள்வோம்
சிட்டுக்குருவியின் முத்த ஒலிகளை
மாறி மாறி தந்து வனவொலி மீட்ட முடிவு செய்வோம்
நம் வனத்தில் கருஞ்சிவப்பு பறவைகள்
நடனமாடி களிக்கட்டும்
நாம் உடலால் ஒரு தூளி செய்து
காட்டு வாகையின் பின் தோளில் கட்டுவோம்
நீ இருந்த திசைக்கொரு மணம் அனுப்புகிறேன்
அத்தர் மணம் பின் தொடர்ந்து என் வனத்தில் வந்து விழு
காடத்தியை வணங்கிவிட்டு
விலா எலும்பு வலிப்பெற
ஒரு முத்தம் கொடுத்தால்
இப்போது
நான் உனக்கு தருவேன் அதிரூப பன்றியொன்றை


கவிதைகள் வாசித்த குரல்:
பிரியதர்ஷினி
Listen On Spotify :

About the author

பிரியதர்ஷினி

பிரியதர்ஷினி

திருச்சியை சார்ந்த பிரியதர்ஷினி இளங்கலை விலங்கியல், முதுகலை விலங்கியல், இளங்கலை கல்வியியல் பயின்றுள்ளார். பள்ளிக்கல்வித் துறையின் கவிதை போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். பள்ளி ஆசிரியர் மற்றும் துப்புரவுப் பணியாளர் குழந்தைகளுக்கான சமூகப்பணி தொண்டு நிறுவனத்திலும் பணியாற்றி வருகிறார்.
படைப்பு, அணங்கு, நீலம், காற்றுவெளி, இந்து தமிழ் திசை, குவிகம், நடு இதழ், நுட்பம், கலகம், கொலுசு ஆகிய இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்திருக்கிறது. இவரின் முதல் கவிதைத் தொகுப்பு “ தோடயம்” யாவரும் பதிப்பகம் மூலம் 2024 ஆம் ஆண்டு கோவை புத்தகக் காட்சியின் போது வெளியானது.

Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

You cannot copy content of this Website